/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை சிகிச்சையில் மற்றொரு மாணவி
/
மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை சிகிச்சையில் மற்றொரு மாணவி
மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை சிகிச்சையில் மற்றொரு மாணவி
மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை சிகிச்சையில் மற்றொரு மாணவி
ADDED : மே 07, 2024 05:13 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்தார். மற்றொரு மாணவி விஷம் குடித்து உயிருக்கு போராடுகிறார்.
ராமநாதபுரம் அருகே வைரவன்கோவில் கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் மகள் சவுமியா என்ற கிேஷார்னி 17. வண்ணாங்குண்டு அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று குறைவான மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
இதே போல் உத்தரகோசமங்கை அருகே பூசேரி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
குறைவான மதிப்பெண் எடுத்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறார்.