sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

போலீஸ் குடியிருப்பை காலி செய்யும் அவலம்

/

போலீஸ் குடியிருப்பை காலி செய்யும் அவலம்

போலீஸ் குடியிருப்பை காலி செய்யும் அவலம்

போலீஸ் குடியிருப்பை காலி செய்யும் அவலம்


ADDED : ஜூன் 27, 2024 11:46 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் போலீஸ் குடியிருப்பில் கடந்த பல நாட்களாக காவிரி குடிநீர் வராததால் வீடுகளை காலி செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

முதுகுளத்துார் டி.எஸ்.பி.,க்கு உட்பட்ட கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்டேஷன் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டது. ஸ்டேஷனில் பணிபுரியும் 10க்கும் மேற்பட்ட போலீஸ் குடும்பங்கள் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு கடந்த சில நாட்களாகவே காவிரி குடிநீர் முறையாக வரவில்லை. டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர். தண்ணீருக்காக சிரமப்பட்டு வரும் நிலையில் ஒருசில போலீஸ் குடும்பங்கள் வீடுகளை காலி செய்து முதுகுளத்துார், பரமக்குடிக்கு சென்று வாடகை வீட்டில் தங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது இருக்கும் ஒருசில குடும்பங்களும் தண்ணீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கீழத்துாவல் போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு முறையாக காவிரி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us