/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்த மீனவர்களுக்கு பாராட்டு விழா
/
அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்த மீனவர்களுக்கு பாராட்டு விழா
அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்த மீனவர்களுக்கு பாராட்டு விழா
அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்த மீனவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஆக 18, 2024 04:00 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆராய்ச்சியகம் மற்றும் மாவட்ட வனத்துறை சார்பில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வலையில் சிக்குவதை மீனவர்கள் பாதுகாப்புடன் மீட்டு கடலில் விட்டதற்காக பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.
மன்னார் வளைகுடா வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர் முன்னிலை வகித்தார்.
கடலில் மீன்பிடிக்கும் போது வலையில் சிக்கிய திமிங்கலம், டால்பின், ஆமை, கடல் பசு ஆகியவற்றை மீட்டு மீண்டும் பாதுகாப்பாககடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுச்சான்று மற்றும் பரிசுத்தொகையை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆராய்ச்சியகம் ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா அய்யர், வனச்சரக அலுவலர்கள், மீனவர்கள் பங்கேற்றனர்.
மீன் பிடிக்கும் போது வலையில் சிக்கிய அரியவகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த பாராட்டு விழா நடக்கிறது.
இதுவரை 29 மீனவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுஎன வனத்துறையினர் தெரிவித்தனர்.

