ADDED : ஜூலை 11, 2024 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: -பரமக்குடி நகராட்சி அருகில் உள்ள சப்தேழு கன்னிமார் கோயிலில் சொர்ண வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது.
தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் விழாவில் ஜூலை 14 காலை 9:00 மணிக்கு உலக மக்கள் நன்மைக்காக மகா யாகம் நடக்கிறது. ஜூலை 15 மாலை 5:30 மணிக்கு வராஹி அம்மன் அலங்காரத்தில் வீதி உலா வருகிறார்.