/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி புதுநகரில் ஆஷாடா நவராத்திரி
/
பரமக்குடி புதுநகரில் ஆஷாடா நவராத்திரி
ADDED : ஜூலை 16, 2024 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : -பரமக்குடி நகராட்சி புதுநகரில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நடந்தது.
இக்கோயிலில் ஜூலை 7ல் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவில் அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு சாற்றப்பட்டு பட்டாடையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வெள்ளை குதிரை கருப்பசாமி அறக்கட்டளை மோகன்தாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.