/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டவுன் பஸ்களில் தானியங்கி கதவு பயணிகள் நிம்மதி
/
டவுன் பஸ்களில் தானியங்கி கதவு பயணிகள் நிம்மதி
ADDED : மார் 11, 2025 04:46 AM

திருவாடானை: டவுன் பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டதால் பயணிகள் நிம்மதியடைந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் படிக்கட்டு பயணத்தைத்தடுக்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான புது பஸ்களில் தானியங்கி கதவுகள் உள்ளன. ஆனால் பழைய பஸ்கள் மற்றும் டவுன் பஸ்களில் கதவு கிடையாது.
இதனால் ஆபத்தான முறையில் மாணவர்கள் படியில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். இது குறித்து போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது: சில பயணிகள் ஸ்டாப் வருவதற்கு முன்பே பஸ்சில் இறங்குவதும், பஸ் புறப்படும் போது ஏறுவதும் வழக்கமாக இருந்தது. அவசர கதியில் செல்லும் பெண்களும் இதுபோன்று திடீரென இறங்க முற்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் டவுன் பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. பஸ்ஸ்டாப் இருந்தால் மட்டுமே அங்கு கதவு திறக்க டிரைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவாடானையை மையமாக வைத்து 12 டவுன்பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் ஏழு பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பஸ்களிலும் கதவு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பயணிகள் கூறியதாவது:
கதவு பொருத்தப்பட்டதால் பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. பெரும்பாலான தனியார் பஸ்களில் கதவு கிடையாது. அந்த பஸ்களிலும் படியில் தொங்கியவாறு பயணிகளின் ஆபத்தான பயணம் தொடர்கிறது. அதனால் தனியார் பஸ்களிலும் தானியங்கி கதவு அமைக்க வேண்டும் என்றனர்.