ADDED : ஜூன் 27, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம், : -பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.
பள்ளியில் செயல்படும் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். திருப்புல்லாணி எஸ்.ஐ., சிவசாமி முன்னிலை வகித்தார்.
பெரியபட்டினம் ஊராட்சித் தலைவர் அக்பர் ஜான் பீவி, ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முகம்மது சலீம், சிறப்பு எஸ்.ஐ., குமார், மணிகண்டன், எஸ்.எம்.சி., நிர்வாகிகள் பாத்திமா பீவி, ஹசன் அலி, களஞ்சியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொது மக்களிடையே போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி., கவுன்சிலர் முத்துக்குமார் செய்திருந்தார்.