/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கவுதமியிடம் மோசடி செய்த அழகப்பனை ஆக. 20ல் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு
/
கவுதமியிடம் மோசடி செய்த அழகப்பனை ஆக. 20ல் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு
கவுதமியிடம் மோசடி செய்த அழகப்பனை ஆக. 20ல் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு
கவுதமியிடம் மோசடி செய்த அழகப்பனை ஆக. 20ல் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 17, 2024 01:35 AM
ராமநாதபுரம்:நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடி பெற்றுக்கொண்டு நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்த காரைக்குடியைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் அழகப்பனை ஆக.,20 ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த போலீசாருக்கு மாஜிஸ்திரேட் பிரபாகரன் உத்தரவிட்டார்.
நில அபகரிப்பு மீட்பு பிரிவினர் அழகப்பனை போலீஸ் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே சுவாத்தானில் பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா லிட்., நிறுவனத்திற்கு சொந்தமான 64 ஏக்கர் நிலத்தை கவுதமிக்கு ரூ.3.16 கோடி பெற்றுக் கொண்டு காரைக்குடி பா.ஜ., பிரமுகர் அழகப்பன் வாங்கி கொடுத்தார்.
இந்நிலத்தை விற்பனை செய்யக்கூடாது என செபி நிறுவனம் தடை செய்துள்ள நிலையில் அதை மறைத்து கவுதமியை மோசடி செய்தனர்.
இதுகுறித்து நடிகை கவுதமி எஸ்.பி., சந்தீஷிடம் புகார் செய்தார்.
நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து அழகப்பன், அவரது மனைவி நாச்சியாள், மகன், மருமகள் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு ஆக.,12 ராமநாதபுரம் 2ம் எண் மாஜிஸ்திரேட் முன் விசாரணைக்கு வந்தது. கவுதமி ஆஜராகி வழக்கறிஞர் நாராயணன் மூலம் அழகப்பனுக்கு ஜாமின் வழங்க கூடாது என மனு செய்தார். இம்மனு விசாரணையை மாஜிஸ்திரேட் பிரபாகரன் தள்ளி வைத்திருந்தார்.
அழகப்பன் ஏற்கனவே காஞ்சிபுரம் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ராமநாதபுரம் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கு விசாரணைக்காக அழகப்பனை ஆக., 20 நேரில் ஆஜர்படுத்த போலீசாருக்கு மாஜிஸ்திரேட் பிரபாகரன் உத்தரவிட்டார். அதே நாளில் அழகப்பனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நில அபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் திட்டமிட்டுள்ளார்.