/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சயன கோலத்தில் முத்தாலம்மன் பூப்பல்லக்கில் பவனி
/
சயன கோலத்தில் முத்தாலம்மன் பூப்பல்லக்கில் பவனி
ADDED : மார் 28, 2024 10:57 PM

பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் அம்மன் சயன திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் பவனி வந்தார்.
முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் நேற்று முன்தினம் காலை முதல் பல்லாயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
மாலை அம்மன் சயன திருக்கோலத்தில் அருள் பாலித்தார். இரவு 10:00 மணிக்கு பூப்பல்லக்கில் எழுந்தருளிய அம்மன் மேளதாளம் முழங்க வீதி உலா வந்தார். அதிகாலை கோயிலை அடைந்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.
நேற்று உற்சவ சாந்தி அபிஷேகம், இரவு தீபாராதனைகளுடன் விழா நிறைவடைந்தது. விழாவையொட்டி 12 நாட்களும் பட்டிமன்றம், கரகாட்டம், ஆடல் பாடல், பரதநாட்டியம் என பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

