/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணிமுத்தாறில் ரூ.8.82 கோடியில் பாலம் பணி
/
மணிமுத்தாறில் ரூ.8.82 கோடியில் பாலம் பணி
ADDED : ஜூன் 30, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே மாணிக்கம்கோட்டை மணிமுத்தாறில் புதிய பாலம் கட்டும் பணி நடக்கிறது.
திருவாடானை ஊராட்சி ஒன்றியம் தேவகோட்டை- வட்டாணம் ரோட்டில் மாணிக்கம் கோட்டை செல்லும் வழியில் மணிமுத்தாறு உள்ளது. மழைக் காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது மாணிக்கம்கோட்டை, பழங்குளம், கடம்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நபார்டு திட்டத்தில் ரூ.8 கோடியே 82 லட்சத்து 31 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு பாலம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

