sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆப்பனுாரில் தரமான கட்டுமானப் பொருளை பயன்படுத்தி ஊராட்சி அலுவலகம் கட்டுங்கள் ஆய்வுக்கு வராத அதிகாரிகளால் அரசு நிதி வீணடிப்பு

/

ஆப்பனுாரில் தரமான கட்டுமானப் பொருளை பயன்படுத்தி ஊராட்சி அலுவலகம் கட்டுங்கள் ஆய்வுக்கு வராத அதிகாரிகளால் அரசு நிதி வீணடிப்பு

ஆப்பனுாரில் தரமான கட்டுமானப் பொருளை பயன்படுத்தி ஊராட்சி அலுவலகம் கட்டுங்கள் ஆய்வுக்கு வராத அதிகாரிகளால் அரசு நிதி வீணடிப்பு

ஆப்பனுாரில் தரமான கட்டுமானப் பொருளை பயன்படுத்தி ஊராட்சி அலுவலகம் கட்டுங்கள் ஆய்வுக்கு வராத அதிகாரிகளால் அரசு நிதி வீணடிப்பு


ADDED : ஜூலை 27, 2024 05:05 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி : ஆப்பனுார் ஊராட்சியில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. 2023 ஜன.,ல் துவக்கப்பட்ட கட்டடப் பணிகள் தற்போது வரை முழுமை பெறாமல் பல மாதங்களாக பாதியில் நிற்கும் நிலையில் அதிகாரிகள் ஆய்வுக்கு வராததால் தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்தாமல் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

எவ்வித திட்டமிடுதலும் இல்லாமல் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தின் மேல் உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. இதனால் கட்டடத்தில் கூரை மற்றும் முதல் தள மாடி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயரழுத்த மின் கம்பியை கடந்து பணிகள் செய்வது இயலாத காரியம். இதனால் விபத்து ஏற்படும்.

ஆப்பனுாரை சேர்ந்த இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கருணாநிதி கூறியதாவது:

கடலாடி யூனியன் நிதியில் கட்டப்படும் ஊராட்சி அலுவலகம் தரமற்ற நிலையில் உள்ளது. முறையாக வேக வைக்கப்படாத செங்கற்களை கட்டுமானத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.

தற்போது கட்டடத்தின் செங்கல் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது.

கட்டடத்தின் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டிய யூனியன் அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனை அளிக்கிறது.

ஊராட்சி அலுவலகத்தின் கட்டடத்தின் மேலே செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும்.

எனவே ஊராட்சி அலுவலக புதிய கட்டத்தில் தரமான பணி நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

---






      Dinamalar
      Follow us