ADDED : பிப் 27, 2025 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி; கமுதி அருகே அரியமங்கலம் கிராமத்தில் நல்ல நாச்சியம்மன் கோயிலில் மாசிக்களரி விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. சின்னமாடு, பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடந்தது. இதில் ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 41 இரட்டை மாட்டு வண்டிகள் மற்றும் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் முதல் நான்கு இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்க பணம், குத்துவிளக்கு, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.