sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புதர்மண்டியுள்ள மணிமுத்தாறு; மழைநீர் செல்ல வழியில்லைங்க 

/

புதர்மண்டியுள்ள மணிமுத்தாறு; மழைநீர் செல்ல வழியில்லைங்க 

புதர்மண்டியுள்ள மணிமுத்தாறு; மழைநீர் செல்ல வழியில்லைங்க 

புதர்மண்டியுள்ள மணிமுத்தாறு; மழைநீர் செல்ல வழியில்லைங்க 


ADDED : ஆக 30, 2024 10:08 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : மணிமுத்தாற்றில் செடிகள் அடர்ந்து புதர் மண்டியிருப்பதால் மழை காலத்தில் நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் எழுவன்கோட்டை கண்மாயிலிருந்து மணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆறு புளியால் வழியாக திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கண்மாய்க்கு சென்று, கண்மாய் நிரம்பும் பட்சத்தில் அங்கிருந்து கலுங்கு வழியாக ஆதியூர், அரும்பூர் கண்மாய் வழியாக தொண்டி கடலை சென்றடையும் வகையில் முந்தைய காலத்தில் அமைக்கபட்டது.

தற்போது ஆற்றில் சீமை கருவேல செடிகளுடன் புதர் மண்டியிருப்பதால் நீரோட்டம் தடைபடுகிறது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்ப வாய்ப்பில்லாததால் விவசாயம் பாதிக்கபட்டுள்ளது.

ஆதியூர் விவசாயிகள் கூறியதாவது: மணிமுத்தாற்றில் செடி, கொடிகள் அடர்ந்து ஆறு இருக்கும் இடமே தெரியாமல் காடு போல் காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் ஆற்றில் நீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு ஓரங்களில் ஆக்கிரமிப்புகளும் அதிகமாக உள்ளது. குப்பை கொட்டபடுவதால் துர்நாற்றமாக உள்ளது. குறிப்பாக மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை மங்களநாதன் குளம் அருகே உள்ள பாலத்தின் இரு பக்கமும் புதர்கள் அடர்ந்துள்ளது. ஆற்றை துார்வார சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us