sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உக்ரைன், இஸ்ரேல் போரை நிறுத்த பேசும் பிரதமர் இலங்கை மீனவர் பிரச்னையை தீர்க்க முடியாதா 

/

உக்ரைன், இஸ்ரேல் போரை நிறுத்த பேசும் பிரதமர் இலங்கை மீனவர் பிரச்னையை தீர்க்க முடியாதா 

உக்ரைன், இஸ்ரேல் போரை நிறுத்த பேசும் பிரதமர் இலங்கை மீனவர் பிரச்னையை தீர்க்க முடியாதா 

உக்ரைன், இஸ்ரேல் போரை நிறுத்த பேசும் பிரதமர் இலங்கை மீனவர் பிரச்னையை தீர்க்க முடியாதா 

8


ADDED : நவ 09, 2024 06:05 AM

Google News

ADDED : நவ 09, 2024 06:05 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : உக்ரைன் போர், இஸ்ரேல் போரை நிறுத்துவதற்கு பேசும் பிரதமர் மோடி தமிழக மீனவர் பிரச்னையை தீர்க்க இலங்கையுடன் பேச முடியவில்லையே என ராமநாதபுரத்தில் நடந்த மீனவர் குறைதீர் கூட்டத்தில் வேதனை தெரிவித்தனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இந்திய கடற்படை கமாண்டர் நரேந்தர் சிங், மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். விவாதம் வருமாறு:

கலெக்டர்: தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் இந்திய- தமிழக அரசின் நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். 2018 முதல் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள், மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரண நிதி கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவர்கள் இருந்தால் அதனை சரி செய்து மீண்டும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

பேட்ரிக், மீனவர் சங்கம்: பாம்பன் பாலத்தில் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில் அங்கு குடியிருந்த மக்களை மீண்டும் குடியமர்த்த வேண்டும்.

ராயப்பன், நாட்டுப்படகு மீனவர்கள் சங்கம்: இலங்கை கடற்படையினர் முன்பெல்லாம் விசைப்படகு மீனவர்களை மட்டுமே கைது செய்வார்கள். தற்போது நாட்டுப்படகு மீனவர்களையும் கைது செய்து வருகின்றனர். இது வேதனைக்குரிய விஷயம். நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களுக்கு தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். துாத்துக்குடி விசைப்படகு மீனர்கள் மீன் பிடிப்பின் போது நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போஸ், விசைப்படகு மீனவர்கள் சங்கம்: இரட்டை மடி வலைகளை வைத்து மீன் பிடி தொழிலில் ஈடுபடுவது தொடர்கிறது. மண்டபம் பகுதியில் அதிகாரிகளின் துணையோடு நடக்கிறது. இதனை நிறுத்தாவிட்டால் இந்த நிலை ராமேஸ்வரம் பகுதிக்கும் பரவி விடும். தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன் பிடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

தேவதாஸ், விசைப்படகு மீனவர் சங்கம்: உக்ரைன், இஸ்ரேல் போர் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மோடி சொன்னால் உலக நாடுகள் அனைத்தும் கேட்டுக்கொள்ளும் என்கின்றனர். ஆனால் இலங்கையுடன் தமிழக மீனவர்கள் பிரச்னையை பேசி தீர்க்க முடியவில்லை. இலங்கை கடற்படை படகுகள் இந்திய எல்லை வரை கண்காணிக்கின்றனர். இந்திய கடற்படையினர் இந்திய எல்லை வரை ரோந்து வருவதில்லை.

கருணாமூர்த்தி, கடல் தொழிலாளர் சங்கம்: மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டும். காலை நேரங்களில் இல்லாமல் மாலை 3:00 மணிக்கு பிறகு நடத்தப்பட வேண்டும். வெளி நாடுகளில் மீன் பிடி தொழிலுக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வெளி நாட்டு சிறையில் வாடும் மீனவர்களை மீட்க இந்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us