ADDED : ஜூன் 20, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே செஞ்சோலை மன நல காப்பகத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று முன் தினம் கலெக்டர் அலுவலகத்தில் மொட்டையடிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்றவர்களை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பாதுகாப்பு பணியில் இருந்த கேணிக்கரை எஸ்.ஐ., ரவிச்சந்திரனை அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். ரவிச்சந்திரன் புகாரில் கேணிக்கரை போலீசார் நாகேஸ்வரன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிந்தனர்.