/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலையோரங்களில் கருகிய மரக்கன்றுகள்
/
சாலையோரங்களில் கருகிய மரக்கன்றுகள்
ADDED : மார் 31, 2024 04:46 AM

கமுதி, : -முதுகுளத்துார்--கமுதி ரோட்டில் சித்திரங்குடி பஸ்ஸ்டாப் அருகே சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகள் கருகுகின்றன.
முதுகுளத்துார்--கமுதி ரோட்டில் கீழக்காஞ்சிரங்குளம் அருகே சாலையோரத்தில் புல்வாய்க்குளம் பஸ் ஸ்டாப் வரை புங்கன், புளிய மரம், வேப்ப மரம் உள்ளிட்ட நிழல் தரும் 100க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நட்டனர்.
அவ்வப்போது தண்ணீர் விட்டு பராமரித்தனர். ஒருசில மரக்கன்றுகளை மட்டும் கால்நடைகளிடம் இருந்து பாதுகாக்க மூடி வைத்துள்ளனர்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் புதிதாக வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் பட்டுப்போய் வீணாகிறது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.
எனவே நெடுஞ்சாலைத்துறையினர்ஆய்வு செய்து நிழல் தரம் மரங்களை நட்டு முறையாக தண்ணீர் விட்டு பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

