/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : செப் 08, 2024 04:23 AM

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள்நடைபெற்ற விழாவில் தினமும் இரவில் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
விழாவில் எட்டாம் நாளான செப்.5ல் விநாயகருக்கு இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து மறுநாள் தேரோட்டம் நடைபெற்று சதுர்த்தி விழாவான நேற்று சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெற்றது.
முன்னதாக கோயிலில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ள மோர்ப்பண்ணை கடலில் பக்தர்கள் நீராடி ஊர்வலமாகச் சென்று கோயில் முன் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து விநாயகர் காளை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.