sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மனைவியை குத்திக்கொன்று கணவர் தற்கொலை பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்

/

மனைவியை குத்திக்கொன்று கணவர் தற்கொலை பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்

மனைவியை குத்திக்கொன்று கணவர் தற்கொலை பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்

மனைவியை குத்திக்கொன்று கணவர் தற்கொலை பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்


ADDED : மே 05, 2024 12:29 AM

Google News

ADDED : மே 05, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் அவரை கத்தியால் குத்திக்கொலைசெய்த கணவர் அதே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார். அவர்களின் இரு குழந்தைகள்பெற்றோரை இழந்து தவிக்கின்றன.

ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோயில் தெருவை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி பன்னீர்செல்வம் 40. இவரது மனைவி சரண்யா 38. இவர் தனியார் பல் மருத்துவமனையில் பணிபுரிந்தார். இவர்களுக்கு அஜய் 16, அச்சிதா 12, இரு குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடக்கும். இதனால் சில மாதங்களாக சரண்யா பகவதியம்மன் கோயில் தெருவில் தனது தந்தை சேது வீட்டில் இருந்துள்ளார். குழந்தைகள் பன்னீர்செல்வத்துடன் இருந்து வந்தனர். இந்நிலையில் உறவினர்கள் இருவரையும் சமரசம் செய்து வைத்துள்ளனர்.

நேற்று முன் தினம்இரவு மது போதையில் வந்த பன்னீர்செல்வம், மாமனார் சேது வீட்டிற்கு சென்று மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் சரண்யாபல்வேறு இடங்களில் கடன் வாங்கியிருந்ததாலும் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் பன்னீர்செல்வம் கத்தியால் மனைவியை குத்திக் கொலை செய்துள்ளார்.

பின் தனதுவீட்டு வாசல் அருகே வந்தவர் அதே கத்தியால் தன்னையும் குத்திக்கொண்டார். இதில் மயங்கி விழுந்துள்ளார். இரவில் கழிப்பறை வந்த மகள் அச்சிதா தந்தை கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வத்தை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பின்னரே பன்னீர்செல்வம் மனைவியை கொலை செய்தது தெரியவந்தது. பெற்றோரை இழந்து இரு குழந்தைகளும் தவிக்கின்றனர். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us