sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெரியபட்டினத்தில் கிடைத்த வட்ட வடிவ கல் நங்கூரம்

/

பெரியபட்டினத்தில் கிடைத்த வட்ட வடிவ கல் நங்கூரம்

பெரியபட்டினத்தில் கிடைத்த வட்ட வடிவ கல் நங்கூரம்

பெரியபட்டினத்தில் கிடைத்த வட்ட வடிவ கல் நங்கூரம்


ADDED : ஜூலை 19, 2024 04:07 PM

Google News

ADDED : ஜூலை 19, 2024 04:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம்: பெரியபட்டினம் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் கப்பலாறு அமைந்துள்ளது. கப்பலாறு பகுதியில் இருந்த கல் நங்கூரத்தை அப்பகுதியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள் ஹாத்திம் மற்றும் அபிஷேக் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கடல் பாறையால் ஆன மூன்று அடி உயரத்தில் ஒன்றரை அடி அகலத்தில் நடுவில் துளையிடப்பட்டு காணப்பட்டது. ஒரு டன்னுக்கும் அதிகமான எடை கொண்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்கள் ஹாத்திம், அபிஷேக் ஆகியோர் கூறியதாவது:

கி.பி., இரண்டாம் நுாற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட இவ்வகை கல் நங்கூரங்கள் கிரேக்க மாலுமி குறிப்பிட்ட 2000 ஆண்டு பழமையான பாண்டிய நாட்டின் பெரிமுடா என்ற நகரத்தை பற்றி ஆய்வு செய்ய உதவும்.

பெரியபட்டினம் நகரம் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய நகரமாக முன்னொரு காலத்தில் விளங்கியுள்ளது. அப்போது பயன்படுத்தப்பட்ட கல் நங்கூரம் தற்போது காலப்போக்கில் வெளியே வருகிறது.

பெரியபட்டினம் பகுதியில் பழமை வாய்ந்த பொருட்களின் எச்சங்கள் நிறைய உள்ளன. சமீபத்தில் ஹிப்ரு மொழி பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டு ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் தொல்லியல் அலுவலகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

எனவே தொல்லியல் துறையினர் உரிய முறையில் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல்வேறு தகவல்கள் காணக் கிடைக்கலாம் என்றனர்.

-----






      Dinamalar
      Follow us