ADDED : செப் 18, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -காஞ்சிபுரத்தில் போராட்டம் நடத்தும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ராமநாதபுரம் சி.ஐ.டி.யு., சார்பில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் எஸ்.ஏசந்தானம் தலைமை வகித்தார். இதில், சாம்சங் நிறுவன தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், தொழிற்சங்க தலைவர்களை மிரட்டுகிற நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு, மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட துணைத்தலைவர் குருவேல், மாவட்ட துணைச்செயலாளர் பாஸ்கரன், தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.