sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சக்கரகோட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கலெக்டர் நடவடிக்கை

/

சக்கரகோட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கலெக்டர் நடவடிக்கை

சக்கரகோட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கலெக்டர் நடவடிக்கை

சக்கரகோட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கலெக்டர் நடவடிக்கை


ADDED : மே 30, 2024 03:17 AM

Google News

ADDED : மே 30, 2024 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சியில் கால்வாய்களை சீரமைத்து கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக மாற்றி பூங்கா அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்ககலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார். சக்கரக்கோட்டை ஊராட்சியில் பட்டணம்காத்தான், மகாசக்தி நகரில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் சோத்துருணிக்கு வந்து சேருவதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து கழிவுநீர் வடிகால் வாய்க்காலை ஒருங்கிணைத்து சீரமைத்து சக்கரக்கோட்டை ஊராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து தினமும் வரக்கூடிய கழிவுநீரை சுத்திகரித்து நல்ல தண்ணீராக மாற்றி பூங்கா அமைத்தல் மற்றும் மரங்கள் வளர்க்கும் திட்ட வரைவுகளை பி.டி.ஓ.,கள் செயல்படுத்த வேண்டும்.

மேலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களை அவ்வப்போது சீரமைத்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் ராமநாதபுரம் பி.டி.ஓ.,க்கள் செந்தாமரை செல்வி, முருகானந்த வள்ளி, அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us