sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கட்டுப்படுத்துங்க ஆபிசர்.. : ராமநாதபுரத்தில் பாலிதீன்  பயன்பாடு அதிகரிப்பு: பிளாஸ்டிக் குப்பையால் நீர்நிலைகளில் பாதிப்பு  

/

கட்டுப்படுத்துங்க ஆபிசர்.. : ராமநாதபுரத்தில் பாலிதீன்  பயன்பாடு அதிகரிப்பு: பிளாஸ்டிக் குப்பையால் நீர்நிலைகளில் பாதிப்பு  

கட்டுப்படுத்துங்க ஆபிசர்.. : ராமநாதபுரத்தில் பாலிதீன்  பயன்பாடு அதிகரிப்பு: பிளாஸ்டிக் குப்பையால் நீர்நிலைகளில் பாதிப்பு  

கட்டுப்படுத்துங்க ஆபிசர்.. : ராமநாதபுரத்தில் பாலிதீன்  பயன்பாடு அதிகரிப்பு: பிளாஸ்டிக் குப்பையால் நீர்நிலைகளில் பாதிப்பு  


ADDED : மார் 14, 2025 07:08 AM

Google News

ADDED : மார் 14, 2025 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப், கவர்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளதால் நீர்வளம், மண் வளத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் நீர்நிலைகள், ஓடை வாய்க்கால்களில் குவிந்துள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும். விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப், கவர்கள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிறு ஓட்டல்கள், கடைகள், மார்க்கெட், பஜார், இறைச்சி கடை, மீன் கடைகளில் பாலிதீன் தாராளமாக பயன்படுத்துகின்றனர். இவ்விஷயத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகளின் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது.

குப்பை கொட்டும் இடங்கள், தொட்டிகளில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக ஊருணி, கண்மாய்களுக்கு செல்லும் வாய்க்கால்களில் குப்பையை கொட்டுவதால் மழை பெய்தாலும் தண்ணீர் முழுமையாக நீர்நிலைகளுக்கு செல்வது இல்லை.

நீர்நிலைகள், ஓடை வாய்க்கால்களில் பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளதை அகற்ற வேண்டும். அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.

---------






      Dinamalar
      Follow us