sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மகசூல் நிலையை எட்டிய கோடை நெல் சாகுபடி

/

மகசூல் நிலையை எட்டிய கோடை நெல் சாகுபடி

மகசூல் நிலையை எட்டிய கோடை நெல் சாகுபடி

மகசூல் நிலையை எட்டிய கோடை நெல் சாகுபடி


ADDED : ஜூலை 05, 2024 10:47 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடை நெல் விவசாயம் மகசூல் நிலையை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன பகுதிக்கு உட்பட்ட புலி வீரத்தேவன் கோட்டை, பொட்டக்கோட்டை, பிச்சனார் கோட்டை, இருதயபுரம், பெரியார் நகர், வல்லமடை உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த ஆண்டு நெல் அறுவடைக்கு பின் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்திருந்தனர்.

அவ்வப்போது பெய்த கோடை மழை மற்றும் பெரிய கண்மாயில் தேங்கியிருந்த தண்ணீர் பயன் அளித்ததாலும், தற்போது சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மகசூல் நிலையை எட்டியுள்ளன.ஒரு சில பகுதிகளில் நெல் வயல்களில் ஈரப்பதம் இல்லாததால் பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை ஆயில் மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கோடை சாகுபடியில் குறைந்த அளவு விவசாயிகள் மட்டுமே ஆர்வம் செலுத்தி வரும் நிலையில் வரும் ஆண்டுகளில் தண்ணீரை பயன்படுத்தி அதிகளவில் விவசாயிகள் கோடை சாகுபடியில் ஆர்வம் செலுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us