/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடியிருப்பு அருகே ஆபத்தான மின்கம்பம்
/
குடியிருப்பு அருகே ஆபத்தான மின்கம்பம்
ADDED : செப் 01, 2024 11:48 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் சங்கரபாண்டி ஊருணி குடியிருப்பு வீடுகள் அருகே மின்கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கு முதுகுளத்துார் துணை மின் நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. முதுகுளத்துார் சங்கரபாண்டி ஊருணி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மின்கம்பம் வழியாக உயரழுத்த மின்கம்பிகள் செல்கிறது. தற்போது சங்கரபாண்டி ஊருணி காளி கோயில் அருகே குடியிருப்பு வீடுகள் மீது மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
கோயில் அருகே இருப்பதால் கட்டட வேலைகளும் பார்க்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.