ADDED : பிப் 25, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே புல்லுார் கண்மாயில் மான்கள் கூட்டமாக வசிக்கின்றன.
நேற்று காலை 10:00 மணிக்கு கண்மாயிலிருந்து வெளியேறிய இரண்டு வயது பெண் புள்ளி மான் வெள்ளையபுரம் ரோட்டில் சென்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. வனத்துறையினர் சென்று மானை மீட்டு கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்தனர்.

