ADDED : பிப் 23, 2025 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே மங்களக்குடி கண்மாயில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன.
நேற்று முன்தினம் கண்மாயிலிருந்து வெளியேறிய இரண்டு வயதுள்ள பெண் புள்ளி மான் மேலணை குடியிருப்பு பகுதியில் புகுந்தது. மானை பார்த்த நாய்கள் விரட்டிக் கடித்ததில் மான் இறந்தது. வனத்துறையினர் மானை மீட்டு கால்நடை டாக்டர் பரிசோதனைக்கு பின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் புதைத்தனர்.

