ADDED : பிப் 27, 2025 12:41 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்; - புரட்சி பாரதம் கட்சி சார்பில் வேங்கை வயல் சம்பவத்தில் சி.பி.ஐ., விசாரணை கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அனித்ராஜா தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ராஜேஸ்குமார், பொருளாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடத்தப்படும் வன் கொடுமைகளை தடுக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.
