/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்த சுறா துடுப்புகள் அழிப்பு
/
சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்த சுறா துடுப்புகள் அழிப்பு
சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்த சுறா துடுப்புகள் அழிப்பு
சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்த சுறா துடுப்புகள் அழிப்பு
ADDED : ஏப் 19, 2024 05:11 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுங்கத்துறையினரால் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட சுறா துடுப்புகள், கடல் அட்டைகள் போன்றவற்றை அழித்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து, கடத்தல்காரர்கள் மீது சுங்கத்துறையால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
2020-21 ல் பறிமுதல்செய்த 446 கிலோ சுறா மீன் துடுப்புகள்,120 கிலோ கடல் அட்டைகள்,இவை அனைத்தும் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு பின்புறத்தில் பெரிய குழி தோண்டி பொருட்களை வனத்துறையினர் முன்னிலையில் கொட்டி அழிக்கப்பட்டது.

