/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திரவுபதி அம்மன் கோயில் தர்மர் பிறப்பு நிகழ்வு
/
திரவுபதி அம்மன் கோயில் தர்மர் பிறப்பு நிகழ்வு
ADDED : ஆக 16, 2024 04:01 AM

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற தர்மர் பிறப்பு நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு கீழக்கோட்டை கிராமத்தார்கள் சார்பில் தர்மர் பிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மூலவர் அம்மனுக்கு கிராமத்தார்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக தினமும் இரவில் பல்வேறு மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்று, முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.30-ல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து செப்.1 ல் மஞ்சள் நீராட்டுதல் விழாவும், செப்.3 ல் பட்டாபிஷேகம் நடைபெற்று விழா நிறைவடைகிறது.
---