/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறு பாலம் நடுவில் ஏற்பட்ட ஓட்டையால் சிரமம்
/
சிறு பாலம் நடுவில் ஏற்பட்ட ஓட்டையால் சிரமம்
ADDED : ஆக 20, 2024 07:25 AM

கமுதி : கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் உள்ள சிறு பாலம் நடுவில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். புதுக்கோட்டை முக்கு ரோட்டில் இருந்து 3 கி.மீ.,ல் உள்ளது. இங்கு சிறு பாலம் நடுவில் ரோட்டில் அடுத்தடுத்து பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகிறது.
இவ்வழியே செல்லும் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.
ரோட்டின் நடுவில் பள்ளம் இருப்பது தெரிவதற்காக கம்புகள் வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இவ்வழியில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எதிரில் வரும் வாகனத்திற்கு வழிவிட்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து சிறுபாலம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் ரோட்டின் நடுவில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.