sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டேங்கர்களை சுத்தம் செய்யாமல் குடிநீர்: ஏர்வாடியில் பாதிப்பு

/

டேங்கர்களை சுத்தம் செய்யாமல் குடிநீர்: ஏர்வாடியில் பாதிப்பு

டேங்கர்களை சுத்தம் செய்யாமல் குடிநீர்: ஏர்வாடியில் பாதிப்பு

டேங்கர்களை சுத்தம் செய்யாமல் குடிநீர்: ஏர்வாடியில் பாதிப்பு


ADDED : பிப் 22, 2025 10:37 PM

Google News

ADDED : பிப் 22, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பெருவாரியான பகுதிகளில் டேங்கரில் விநியோகிக்கப்படும் தண்ணீரை பருகும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவுகிறது.

ஏர்வாடி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் அன்றாடம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. உச்சிப்புளி உள்ளிட்ட பகுதியில் இருந்து தண்ணீர் சேகரித்து ஏர்வாடி பகுதிகளில் வீடுகள், லாட்ஜ்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீரை குடம் ரூ.10க்கு விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் டேங்கர்களை முறையாக பராமரிக்காமல் பாசி படர்ந்த நிலையில் ஏற்கனவே உள்ள நீரை சுழற்சி முறையில் பயன்படுத்துவதால் அதனை அப்படியே பருகுவோர் சிரமத்தை சந்திக்கின்றனர். ஏர்வாடியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் டேங்கர் லாரிகளை மட்டுமே பொதுமக்கள் பெருமளவில் நம்பி உள்ளனர். குடிநீர் டேங்கர்களில் முறையாக சுத்தம் செய்யாமலும் ப்ளீச்சிங் பவுடர் செய்து அவற்றை பராமரிக்காமல் விட்டுள்ளதால் பாசி படர்ந்து இரும்பு துகள்கள் தங்கியும் உள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் உரிய முறையில் டேங்கர்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

--






      Dinamalar
      Follow us