sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கிராமங்களில் உலர்களங்கள் தேவை ரோடுகளில் காய வைக்கும் அவலம்

/

கிராமங்களில் உலர்களங்கள் தேவை ரோடுகளில் காய வைக்கும் அவலம்

கிராமங்களில் உலர்களங்கள் தேவை ரோடுகளில் காய வைக்கும் அவலம்

கிராமங்களில் உலர்களங்கள் தேவை ரோடுகளில் காய வைக்கும் அவலம்


ADDED : பிப் 24, 2025 04:33 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் ரோடுகள் உலர் களங்களாக மாறியுள்ளன. கிராமங்கள் தோறும் விளை பொருட்களை காய வைக்கும் உலர் களங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாடானை தாலுகாவில் ஆண்டுதோறும் 26ஆயிரத்து 650 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இப்பகுதிகளில் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் விவசாயிகள் நெல்லை தனியார் வியாபாரிகள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கின்றனர்.

கிராமங்களில் நேரடியாக வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், விளை பொருட்களை உலர வைக்கும் வகையில் கிராமங்கள் தோறும் உலர் களங்கள் இல்லை.

இதனால் விவசாயிகள் ரோடுகள் மற்றும் பொது இடங்களில் காய வைக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

இது குறித்து கூகுடி முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன்ராஜா கூறியதாவது- சில கிராமங்களில் உலர் களங்கள் இருந்தாலும், பயன்படுத்த முடியாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே கிராமங்கள் தோறும் உலர் களங்கள் அமைக்கவும், பழைய உலர் களங்களை புதுப்பிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us