ADDED : ஜூன் 18, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை,: திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமி நாராயணப்பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில்களில் நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பால், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.