sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தேரோடும் வீதியில் பூமிக்கடியில் மின்கம்பி திட்டத்திற்கு வலியுறுத்தல்

/

தேரோடும் வீதியில் பூமிக்கடியில் மின்கம்பி திட்டத்திற்கு வலியுறுத்தல்

தேரோடும் வீதியில் பூமிக்கடியில் மின்கம்பி திட்டத்திற்கு வலியுறுத்தல்

தேரோடும் வீதியில் பூமிக்கடியில் மின்கம்பி திட்டத்திற்கு வலியுறுத்தல்


ADDED : ஏப் 18, 2024 05:11 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானையில் தேரோடும் வீதியில் பூமிக்கடியில் மின்கம்பி புதைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.

திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது.

வைகாசி விசாக திருவிழாவின் போது ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், சிநேகவல்லி அம்மன் மற்றொரு தேரிலும் வலம் வருவார்கள்.

ஆடியில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவின் போது சிநேகவல்லி அம்மன் தேரோட்டம் நடைபெறும்.

இந்த தேர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு தெருக்கள் வழியாக செல்லும். தேர்கள் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் நான்கு தெருக்களிலும் மின் கம்பங்கள் வழியாக குறுக்கே செல்லும் மின்கம்பிகளை ஊழியர்கள் அவிழ்த்து விடுவார்கள்.

தேர்கள் நிலைக்கு சென்றவுடன் மின்கம்பிகள் மீண்டும் சரிசெய்யப்படும்.

இதனால் பல மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் பூமிக்கடியில் மின்கம்பிகளை புதைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தபட்டுள்ளது.

மக்கள் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் தேரோடும் வீதிகளில் பூமிக்கடியில் மின்கம்பிகள் புதைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் பாதுகாப்பான திட்டமாக உள்ளது. வைகாசி விசாக திருவிழா துவங்க இருப்பதால் தேரோடும் வீதியில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us