sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டூவீலர் மீது கார் மோதி மீனவர் பலி இருவர் காயம்

/

டூவீலர் மீது கார் மோதி மீனவர் பலி இருவர் காயம்

டூவீலர் மீது கார் மோதி மீனவர் பலி இருவர் காயம்

டூவீலர் மீது கார் மோதி மீனவர் பலி இருவர் காயம்


ADDED : ஜூலை 05, 2024 04:35 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூர் கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் மீனவர் பலியானார். இருவர் காயமடைந்தனர்.

சாயல்குடி-நரிப்பையூர் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு தெற்கு நரிப்பையூரை சேர்ந்த மீனவர்களான ரகுமான் 50, சாகுல் 45, நாசர் 47, மூவரும் ஒரே டூவீலரில் மீன்பிடி தொழிலுக்காக மூக்கையூர் துறைமுகம் நோக்கி சென்றனர்.

அப்போது கோவில்பட்டியில் இருந்து காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் சென்றனர். இவர்களின் கார் முன்னால் சென்ற டூவீலரில் மோதியதில் மூவரும் காயமடைந்தனர்.

டூவீலரில் பின்னால் அமர்ந்திருந்த ரகுமானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். காயமடைந்த மற்ற இரு மீனவர்களையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சாயல்குடி இன்ஸ்பெக்டர் முகமது இர்ஷாத் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us