sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஜூன் 14 இரவு மீன்பிடிக்க அனுமதி மீனவர் சங்கம் கோரிக்கை

/

ஜூன் 14 இரவு மீன்பிடிக்க அனுமதி மீனவர் சங்கம் கோரிக்கை

ஜூன் 14 இரவு மீன்பிடிக்க அனுமதி மீனவர் சங்கம் கோரிக்கை

ஜூன் 14 இரவு மீன்பிடிக்க அனுமதி மீனவர் சங்கம் கோரிக்கை


ADDED : ஜூன் 02, 2024 02:37 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க ஜூன் 14 இரவு 8:00 மணிக்கு தான் மீன்பிடிக்க அனுமதி வழங்கவேண்டும் என மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்.15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன் பிடிக்க செல்ல அரசு தடை விதித்துள்ளது. இத்தடை முடிய இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் படகுகளை புதுப்பிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜூன் 14 அதிகாலை 12:00 மணியுடன் தடைக்காலம் முடிகிறது. ஆனால் சில மாவட்டங்களில் மீனவர்கள் ஜூன் 14 மாலை 5:00 மணிக்கே மீன்பிடிக்க செல்வதால் பிரச்னை ஏற்படுகிறது.

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சகாயம் கூறியதாவது:

தடைக்காலம் முடிவதற்கு முன்பே பல மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களும் ஆவலுடன் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இவர்கள் ஜூன் 16ல் கரை திரும்புவர். கடலில் அதிக நேரம் இருப்பதால் ஐஸ்கட்டிகள் கரைந்து இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட மீன்கள் அழுகி விடுகிறது.

பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி., தலைமையில் மீனவர்கள், ஐஸ் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஜூன் 14 இரவு 8:00 மணிக்கு மேல் ஐஸ் கட்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us