sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆபத்தை உணராமல் பாம்பன் ரயில் பாலத்தை படகில் கடக்கும் மீனவர்கள்

/

ஆபத்தை உணராமல் பாம்பன் ரயில் பாலத்தை படகில் கடக்கும் மீனவர்கள்

ஆபத்தை உணராமல் பாம்பன் ரயில் பாலத்தை படகில் கடக்கும் மீனவர்கள்

ஆபத்தை உணராமல் பாம்பன் ரயில் பாலத்தை படகில் கடக்கும் மீனவர்கள்


ADDED : ஆக 27, 2024 04:26 AM

Google News

ADDED : ஆக 27, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே பாம்பனில் தடையை மீறி புதிய ரயில் துாக்கு பாலத்தை ஆபத்தை உணராமல் மீனவர்கள் நாட்டுப்படகில் கடந்து செல்வதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

பாம்பன் கடலில் 2020ல் துவங்கிய புதிய ரயில் பாலம் கட்டும் பணி முடிந்து தற்போது அதன் நடுவில் 650 டன் துாக்கு பாலத்தை பொருத்தும் பணி நடக்கிறது. இதற்காக பாலம் நடுவில் கடலில் இரும்பு துாண்கள் ஊன்றி இதன் மீது துாக்கு பாலத்தை வைத்து, இரு பாலத்தையும் ரயில்வே ஒப்பந்த பொறியாளர்கள் பொருத்திவருகின்றனர்.

இச்சூழலில் பாலத்தில் படகில் கடந்து செல்ல முடியாததாலும், கனரக தொழில்நுட்ப பணி நடப்பதாலும் இரும்பு பாகங்கள் எதிர்பாராமல் படகுகள் மீது விழுந்து மீனவர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளதாலும், ஜூன் முதல் மீனவர்கள் பாலத்தை கடந்து செல்ல ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது.

ஆனால் இதனை பொருட்படுத்தாத மீனவர்கள் தடையை மீறி கடலில் உள்ள இரும்பு துாண்கள் இடையில் நாட்டுப்படகில் நுழைந்து கொண்டு கடந்து செல்கின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் இதை தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us