ADDED : மே 05, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே சம்பை கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் சர்ச் கொடிமரம் அர்ச்சிப்பு மற்றும் பல்நோக்கு அரங்கம் திறப்பு விழா நடந்தது. சிவகங்கை மறைமாவட்ட ஆயர் ஆனந்தம் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
பல்நோக்கு அரங்கத்தை சென்னை மறை மாநில தலைவர் ஜேசுதாஸ் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கூட்டு திருப்பலி நடந்தது. ஏற்பாடுகளை பாதிரியார் பாக்கியராஜ் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.
