sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழக்கரை ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை

/

கீழக்கரை ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை

கீழக்கரை ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை

கீழக்கரை ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை


ADDED : ஜூன் 07, 2024 05:04 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: கீழக்கரை, ஏர்வாடியில் உள்ள சில ஓட்டல்களில் கெட்டுப்போன மீன் உணவு விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சில ஓட்டல்களில் லாப நோக்கத்தில் நாள்பட்ட மீன்களை பிரிட்ஜில் வைத்து அவற்றை குழம்பிலும், பொரித்தும் வைத்து விற்பனை செய்வது அதிகரித்து வந்தது. இதுகுறித்து பொதுமக்களின் புகாரின் பேரில் தினமலர் நாளிதழில் கடந்த ஜூன் 4ல் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக கீழக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட ஓட்டல்களில் உணவு கலப்பட தடுப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயகுமார் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை பகுப்பாய்வு வாகனத்தில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமநாதபுரம் அலுவலர் தர்மர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது கலர் அதிகமாக பயன்படுத்தியகோழி இறைச்சியை கொட்டி அழிக்கப்பட்டது. உரிமையாளர்களுக்கும் உணவுப் பொருட்களை கையாள்வோருக்கும் உணவு பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

சந்தேகத்தின் அடிப்படையில் உணவுப் பொருட்களை உணவு மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்பட்டதில் சுத்தம் மற்றும் சுகாதாரம் இல்லாத கடைகளுக்கு அபராதம், நோட்டீஸ் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us