ADDED : மே 12, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலத்தில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் காருண்யா நர்சிங் கல்லுாரியும் இணைந்து கல்லுாரி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அதிகம் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கண் கண்ணாடி மற்றும் மேல் சிகிச்சைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் சுசில் செய்திருந்தார்.