/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அபிராமத்தில் நாய் கடித்து சிறுமி காயம்
/
அபிராமத்தில் நாய் கடித்து சிறுமி காயம்
ADDED : ஜூலை 01, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி, : அபிராமம் அருகே செவல்தோட்டம் இடத்தில் விளையாடிய சிறுமி சத்யாசஸ்மீன் 3, வெறிநாய்கள் கடித்ததில் காயமடைந்துள்ளார்.
அபிராமம் உடையநாதபுரத்தை சேர்ந்த வெள்ளைசாமி மகள் சத்யாசஸ்மீன் 3, செவல்தோட்டம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஐந்துக்கு மேற்பட்ட வெறிநாய்கள் சத்யாசஸ்மீனை கடித்தது. காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல்சிகிச்சைக்காக சத்யாசஸ்மீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தெருக்களில் வெறிநாய்கள் அதிகமாக உலா வருகின்றன. மக்கள் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர். தெரு நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.