/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடுபட்டவர்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா கொடுங்க
/
விடுபட்டவர்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா கொடுங்க
விடுபட்டவர்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா கொடுங்க
விடுபட்டவர்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா கொடுங்க
ADDED : ஆக 13, 2024 12:15 AM

ராமநாதபுரம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ள ஏழை மக்களில் சிலருக்கு மட்டும் பட்டா வழங்கியுள்ளனர். மீதியுள்ளவர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில் ஆர்.எஸ். மங்கலத்தை சேர்ந்த பெண்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் ஏற்கனவே 90 பேருக்கு தருவதாக கூறிவிட்டு தற்போது 40 பேருக்கு மட்டும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே விடுபட்ட ஏழை மக்ககளுக்கும் விரைவில் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ஏற்கனவே வழங்கியவர்களுக்கு நிலங்களை அளவிட வேண்டும் என வலியுறுத்தினர்.