/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவகாளி அம்மன் கோயில் வைகாசி விழா
/
சிவகாளி அம்மன் கோயில் வைகாசி விழா
ADDED : ஜூன் 06, 2024 05:15 AM
முதுகுளத்துார், : முதுகுளத்துார் சங்கரபாண்டி ஊருணி கரையில் உள்ள சிவகாளி அம்மன் கோயில் வைகாசி விழா நடந்தது.
இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் வந்தனர்.
முதுகுளத்துார் காந்தி சிலை அருகே உள்ள விநாயகர் கோயிலில் இருந்து அக்னிசட்டி, பால்குடம் எடுத்து பஸ் ஸ்டாண்ட், வடக்கூர், முருகன் கோயில், செல்வி அம்மன் கோயில் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.
பின்பு சிவகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. 108 விளக்கு பூஜை நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பூஜாரி கிழவன் செய்தார். விழா கமிட்டியாளர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.