/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இ--சேவை மையத்தில் அரசு தொடக்கப்பள்ளி
/
இ--சேவை மையத்தில் அரசு தொடக்கப்பள்ளி
ADDED : மார் 26, 2024 11:44 PM
சாயல்குடி : சாயல்குடி அருகே எஸ்.வாகைக்குளத்தில் அரசு தொடக்கப்பள்ளி மூன்றாண்டுகளாக இ--சேவை மையத்தில் செயல்படுகிறது.
சாயல்குடி அருகே எஸ்.வாகைக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை 50 மாணவர்கள், தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு அரசு தொடக்கப் பள்ளியின் ஓட்டு கட்டடத்தின் உத்தரக்கட்டை கீழே விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து பள்ளி கட்டடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
பள்ளிக்கூடத்திற்கு கட்டட வசதி இல்லாததால் வாகைகுளம் இ--சேவை மையத்தில் வகுப்புகள் செயல்படுகிறது. பெற்றோர் மலை முருகன் கூறியதாவது:
இ--சேவை மையத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இடித்து அகற்றப்பட்ட இடத்தில் புதிய பள்ளி கட்டடம் கட்டவும், தேர்தல் முடிந்த பிறகு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

