sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்த்த மழை ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

/

ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்த்த மழை ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்த்த மழை ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்த்த மழை ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்


ADDED : மே 21, 2024 05:50 AM

Google News

ADDED : மே 21, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் நேற்று கனமழை பெய்ததால் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

கோடை மழை தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் நிலையில் நேற்று காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை ராமேஸ்வரம் பகுதியில் கனமழை பெய்தது. இதன் பின் சாரல் நீடித்ததால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதில் ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு ரோட்டில் 2 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியது. கோயில் கிழக்கு, தெற்கு ரத வீதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மக்கள் கடைகளில் பொருள்கள் வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.

நேற்று முன்தினம் இரவு பாம்பனில் 130 மி.மீ., ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் தலா 90 மி.மீ., மழை பெய்து தீவை 'குளுகுளு' பகுதியாக மாற்றியது. சுட்டெரித்த வெயிலுக்கு கோடை மழை இதமாகவும், குளிர் காலத்தில் பெய்த மழையை போல் உள்ளது என மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us