/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளிவாசலுக்கு சீர்வரிசை வழங்கிய ஹிந்துக்கள்
/
பள்ளிவாசலுக்கு சீர்வரிசை வழங்கிய ஹிந்துக்கள்
ADDED : மே 18, 2024 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
:
திருவாடானை அருகே ஊமைஉடையான்மடை கிராமத்தில் மஸ்ஜிதுத் தக்வாஜூம்ஆ புதிய பள்ளி வாசல் திறப்பு விழா நடந்தது.
அக்கிராமத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் சீர்வரிசையுடன் சென்று திறப்பு விழாவை கொண்டாடினர்.
முன்னதாக கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலிருந்து தாம்பூல தட்டில் தேங்காய், பழம் வைத்து பெண்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று விழாவை சிறப்பித்தனர். மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக இந் நிகழ்ச்சி இருந்தது.
விழாவை முன்னிட்டு பள்ளிவாசல் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

