ADDED : பிப் 28, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. சீதையை மீட்கும் பொருட்டு ராமபிரான் இவ் வழியே சென்ற போது இங்கு இளைப்பாறினார். அவருக்கு தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்ததாக வரலாறு உள்ளது.
அமாவாசை நாட்களில் பொதுமக்கள் இங்குள்ள கடலில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். நேற்று மாசி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கடலில் புனித நீராடி, சகலதீர்த்தமுடையவர், சவுந்தரநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.

