sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மனித சங்கிலி விழிப்புணர்வு

/

மனித சங்கிலி விழிப்புணர்வு

மனித சங்கிலி விழிப்புணர்வு

மனித சங்கிலி விழிப்புணர்வு


ADDED : ஜூன் 01, 2024 04:18 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மனித சங்கிலி வடிவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பிரசாரம் நடந்தது.

கலெக்டர் அலுவலகபஸ் ஸ்டாப் அருகே நடந்த மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை ராமநாதபுரம் வனச்சரகர் திவ்யலெட்சுமி துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் அனந்த நாராயணன், முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் வரவேற்றார்.

ஆண்டுதோறும் ஒரு மையக்கருத்தை தேர்வு செய்து உலக சுற்றுச்சூழல் தினம் நடக்கிறது. இவ்வாண்டின் மையக்கருத்தாக நில மறு சீரமைப்பு, பாலைவனமாதல் மற்றும் வறட்சி தாங்கு திறன் என்ற தலைப்பில் ஜூன் 5ல் உலகச்சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலங்கள், மனித சங்கிலி, கருத்து பட்டறைகள், மரங்கள் வளர்த்தல், கடற்கரைகளில் துாய்மைப் பணி செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதன்படி முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரி பயிற்சி ஆசிரியர்களால் மனித சங்கிலி நடந்தது. அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்தனர்.

பரமக்குடி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், கல்லுாரி பேராசிரியர்கள், மாவட்ட தேசிய பசுமைப்படை அமைவுப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us