sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பஞ்சந்தாங்கியில் தென்னந்தட்டி முடையும் பணியில் பெண்கள் உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு

/

பஞ்சந்தாங்கியில் தென்னந்தட்டி முடையும் பணியில் பெண்கள் உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு

பஞ்சந்தாங்கியில் தென்னந்தட்டி முடையும் பணியில் பெண்கள் உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு

பஞ்சந்தாங்கியில் தென்னந்தட்டி முடையும் பணியில் பெண்கள் உழைப்பு அதிகம் ஊதியம் குறைவு


ADDED : ஜூன் 14, 2024 04:42 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி, சேதுக்கரை, பஞ்சந்தாங்கி, தினைக்குளம், ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, பத்திராதரவை, நைனாமரைக்கான் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன.

தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் பழுப்பு மட்டையில் இருந்து தென்னந்தட்டிகள் மற்றும் கிடுகுகள் தயாரிப்பதில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சந்தாங்கி பால்ராஜ், முனியம்மாள் ஆகியோர் கூறியதாவது:

தென்னந்தோப்புகளில் மட்டையை ரூ.2 விலைக்கு வாங்குகிறோம். நாள் முழுவதும் தென்ன மட்டையை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் மூன்று மட்டை மற்றும் மற்றொரு மட்டையின் பாதி ஆகியவற்றை முடிந்து பின்ன வேண்டும்.

மேலும் 6 அடி 5 அடி அகலத்தில் பின்னப்படும் தென்னந்தட்டிகள் விற்பனைக்காக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், உள்ளிட்ட பகுதிகளுக்கும் ராமநாதபுரம் நகரின் பல பகுதிகளுக்கும் வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் கோயில் விழாக்களில் தென்னந்தட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

முன்பு தென்னந்தட்டிகள் மற்றும் கிடுகுகளின் பயன்பாடு அதிகம் இருந்த நிலையில் சாமியானா பந்தல், பிளாஸ்டிக் பந்தல் உள்ளிட்ட பல வகையான நவீன தொழில்நுட்ப பந்தல்களால் இத்தொழில் சற்று முடங்கியுள்ளது. செயற்கைக்கு மாற்றாக இயற்கையான முறையில் அமைக்கப்படும் தென்னந்தட்டிகளுக்கு எப்போதும் மவுசு உள்ளது.

தென்னந்தட்டி ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யப்படுகிறது, ஒரு நாளைக்கு ஐந்து தட்டிகள் முடைய முடிகிறது, உழைப்பு அதிகம், ஊதியம் குறைவு என்றனர்.






      Dinamalar
      Follow us