/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் சாலை ஓரத்தில் கொட்டும் குப்பையால் அவதி
/
கீழக்கரையில் சாலை ஓரத்தில் கொட்டும் குப்பையால் அவதி
கீழக்கரையில் சாலை ஓரத்தில் கொட்டும் குப்பையால் அவதி
கீழக்கரையில் சாலை ஓரத்தில் கொட்டும் குப்பையால் அவதி
ADDED : ஆக 25, 2024 10:44 PM
கீழக்கரை :
-கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை அரசு கால்நடை மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக் கேடு நிலவுகிறது.
கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுப்பகுதியில் இருந்து கொட்டப்படும் குப்பை சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. சில நேரங்களில் அவற்றை தீவைத்து எரிப்பதால் புகைமூட்டம் சூழ்ந்துவிடுகிறது.
இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் குப்பைத்தொட்டி வைத்திருந்தாலும் அவற்றில் குப்பையை கொட்டாமல் திறந்த வெளியில் கொட்டும் நிலை தொடர்கிறது.
எனவே தில்லையேந்தல் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் அடிக்கடி குப்பை கொட்டுவதை தடுக்க அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்தால் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.